tamilnadu

img

முதுமலையில் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் – வனத்துறை அறிவுரை  

முதுமலையில் பட்டாசுகள் இன்றி பசுமை தீபாவளியைக் கொண்டாட வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.  

நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் உள்ள பொக்காபுரம், ஆச்சக்கரை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில், பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மசினக்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் தங்கும் விடுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளும், தீ மூட்டவும், பட்டாசு வெடிக்கவும் வேண்டாம் என வனத்துறையினர் கேட்டு கொண்டனர். மீறி வெடித்தால் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

;