உதகை, நவ. 6 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட மூத்த உறுப்பின ரும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் தலை வருமான ராஜம்மாள் (75) உடல்நலக்குறைவால் வியாழனன்று காலமானார். உதகை அருகே பெங்கால் மட்டம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப் பட்டிருந்த அன்னாரின் உட லுக்கு மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து வெள்ளியன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.