உதகை, மார்ச் 1- பந்தலூர் அருகே 12 சக்கர சரக்கு லாரி வளைவில் சிக்கி யதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இருந்து பொன்னானி வழியாக சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி சென்ற சரக்கு லாரி வளைவில் திருப்ப முடியாமல் சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அவ்வழியாக பயணித்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைந் தனர். நீலகிரி மாவட்டத்தில் அதிக நீளம் கொண்ட 12 சக்கர வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் சிலர் தடையை மீறி இத்தகைய வாகனங் களை இயக்கி வருகிறார்கள். இவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.