tamilnadu

img

கொரோனா நிவாரணம்... டுவிட்டர் இணை இயக்குநர் ரூ.100 கோடி நிதியுதவி

நியூயார்க்:
உலகை உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு டுவிட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி (43) ஒரு பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.100 கோடி) நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது,"சர்வதேச கொரோனா நிதிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி அளிக்க உள்ளேன். ஸ்கொயர் நிறுவனத்தில் தனக்கிருக்கும்  பங்குகளை ஸ்மார்ட்ஸ்மால் நிறுவனத்திற்கு மாற்ற உள்ளேன். (இது அவரது சொத்து மதிப்பில் 28 சதவீதம்) கொரோனா முடிந்த பின்னர், பெண்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்படும்.கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் .இந்த நன்கொடை மிகவும் சிறியது எனவும் தெரிவித்துள்ளார். ஜாக்டோர்சிக்கு  சுமார் 93.9 பில்லியன் சொத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;