tamilnadu

img

மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் மோடி, ஜி ஜின்பிங் சந்திப்பு

புதுதில்லி, செப். 2- மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி யும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் வரும் அக்டோபர் மாதம் சந்தித்துப் பேச வுள்ளனர். இந்தியா-சீனா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகளும், அதேவேளை இருதரப்பு பரிமாற்றங்களும் நிலவி வரும் நிலையில், அதுகுறித்து பேசு வதற்காக இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படுவது வழக்கம். சீனாவிலுள்ள உகான் நகரில் இந்தியா-சீனா இடையேயான முதல் முறைசாரா உச்சி மாநாடு கடந்த ஆண்டு ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. 

அதில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்தியா வருமாறு சீனா ஜனாதிபதிக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு வரும் அக்டோபர் மாதம் தமிழகத்தின் கலைநகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.  அக்டோபர் 11, 13 ஆகிய தேதிகளில் மோடியும், ஜீ ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இரு தலைவர்களும் இணைந்து மாமல்லபுரத்திலுள்ள பழங்கால நினைவுச் சின்னங்களை பார்வை யிடலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டுவருகின்றன. 

இதுதொடர்பாக மத்திய வெளி யுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் அண்மையில் சென்னையில் ஆலோசனையும் மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட சீன பாது காப்பு அதிகாரிகள் விரைவில் சென்னை வரவுள்ளனர். இந்த சந்திப்பு முதலில் மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் நடைபெற இருந்தது. சில காரணங்களுக்காக அது முடியாமல் போகவே மாமல்லபுரத்திற்கு மாற்றப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மாமல்ல புரத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ தளவாடக் கண்காட்சியை துவக்கிவைத்துவிட்டுச் சென்றார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராஜீய விவகாரங்கள் தொடர்பான நிகழ்வு தமிழகத்தில் நடைபெறுவது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.