பிளஸ்-2 மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் ஜூலை 13-ல் வெளியிடப்படு கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் உறுதி என்று பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடை பெறும் என்றும் கூட்டத்தொடரை நடத்துவதற்கான அனைத்து நடை முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை களை அரசு எடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் 2 ஆம் அனல் மின்நிலையத்தில் ஜூலை 1 ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் என்ற ஊழியர், ஞாயி றன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 பேராக அதி கரித்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் நடத்திய கணக்கெடுப்பில் இந்தியாவில் மொத்தம் 2 ஆயிரத்து 967 புலிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்து. இது கேமரா மூலம் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய வன உயிரினக் கணக்கெ டுப்பாக உலக சாதனை படைத்து கின் னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச் சலத்தில் திங்கள் முதல் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று விருத்தாச்சலம் நகராட்சி அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பாஜக தீவிரமாக முயற்சி மேற்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்களை பல கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறது என காங்கிரஸ் மேலிடம் குற்றம்சாட்டியுள்ளது.