tamilnadu

img

உலகை மிரட்டும் கொரோனா...  ஒரே நாளில் 2.80 லட்சம் பேருக்கு தொற்று... 

தில்லி 
உலகை தனது உள்ளங்கையில் வைத்து மிரட்டி வரும் கொரோனா என்னும் ஆட்கொல்லி வைரஸ் தற்போது 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஒரு சில தீவு நாடுகளையே மற்ற நாடுகள் கொரோனாவால் உருகுலைந்துள்ளன. 

இந்நிலையில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் உலகில் 2,80,157 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதான் உலகின் அதிகபட்ச தினசரி பாதிப்பு. இதற்கு முன் 2.48 லட்சம் பாதிக்கப்பட்டதே அதிகபட்ச பாதிப்பாக இருந்தது அதிகபட்சமாக அமெரிக்காவில் 71 ஆயிரம் பேரும், பிரேசிலில் 65 ஆயிரமும், இந்தியாவில் 45 ஆயிரமும் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது. மற்ற நாடுகளில் 15 ஆயிரத்துக்குள் தான் பாதிப்பு. தென் ஆப்பிரிக்காவில் மட்டும் 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

பலி எண்ணிக்கையும் உயருகிறது....
கடந்த 24 மணிநேரத்தில் ஒட்டுமொத்த உலகில் 7,128 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். அதிகபட்சமாக பிரேசிலில் 1,293 பேரும், அமெரிக்காவில் 1,205 பேரும், இந்தியாவில் 1,120 பேரும் உயிரிழந்துள்ளனர்.ஆறுதல் செய்தியாக ஒரே நாளில் 2.39 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். பிரேசிலில் 66 ஆயிரம் பேரும், அமெரிக்காவில் 55 ஆயிரம் பேரும், இந்தியாவில் 31 ஆயிரம் பேரும் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.  

;