இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சனை இருந்து வரும் நிலையில், நேபாள எல்லைப் பகுதியான லிபுலேக் கணவாய் பகுதியில் சீனா தனது படைகளை குவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தப் பகுதியில் சீனாவின் நவீன போர் விமானமான ஜே-20 ஐ விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாக சீன அரசு பத்திரிகையான ‘குளோபல் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு உள்ளது.