நியூயார்க், ஜூலை 2 - பேஸ்புக் அலுவலகத்தி ற்கு ‘சரின்’ என்ற ரசாயனத்தை அஞ்சல் மூலம் அனுப்பியதால் அங்கு பதற்றம் நிலவியது. பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கலிஃபோர்னியாவில் மென் லோ பார்க் என்ற இடத்தில் உள்ளது. அதற்கு அருகி லேயே அந்நிறுவனத்தின் குடோன் இருக்கிறது. திங்களன்று அங்கு வந்த பார்சல் ஒன்றை பரிசோதித்த போது, அதில் நச்சு ரசாயன மான ‘சரின்’ இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து பேஸ்புக்கிற்கு சொந்தமான 4 கட்டிடங்களில் இருந்தும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறை அதி காரிகள், சரின் ரசாயன பார்சலை கையாண்டவர்களு க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என சோதனை செய்தனர். அவர்களுக்கு பாதிப்புக் கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்பது உறுதி செய் யப்பட்டது. அதை அடுத்து, ‘சரின்’ இருப்பதாகக் கூறப் படும் பார்சல் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். சான் பிரான்சிஸ்கோவில் இருந்து எஃப்.பி.ஐ. அதி காரிகளும் விரைந்துள்ளனர். ‘சரின்’ ரசாயனம் நரம்பு மண் டலத்தை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சு அமிலம் என்பது குறிப்பிடத்தக்கது.