சென்னை,ஏப்.15- கோவிட்-19 வைரஸ் தொற்று நிவாரண நிதிக்கு 25 கோடி ரூபாயை தன்னுடைய பங்க ளிப்பாக வழங்க இருப்பதாக பிடிலைட் நிறுவ னம் தெரிவித்துள்ளது. இந்த நிதியானது, கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளில் உதவும் வகையில் மத்திய அரசு மற்றும் அவசரகால நிவா ரண நிதி தேவைப்படும் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாரத் பூரி தெரிவித்துள்ளார். ஊழியர்க ளின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்ப தில் அக்கறையுடன் தொடர்ந்து கவனம் செலுத்து வோம் என்றும் அவர் ஒரு அறிக்கையில் கூறி யுள்ளார்.