சென்னை, செப். 16 - கட்டுமான தொழிலாளர்க ளுக்கு விபத்து மற்றும் இயற்கை மரண நிவாரண நிதியை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டு ள்ளது. தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் 30 லட்சத்து 52 ஆயிரத்து 37 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். வாரியத்தில் கட்டுமானம் தொடர்புடைய 53வகையான தொழில் செய்யக்கூடியவர்கள் உறுப்பினர்களாக இணைய லாம். இந்த வாரியத்தின் 30வது கூட்டம் திங்களன்று (செப்.16) சென்னையில் நடைபெற்றது. தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், வாரியத்தின் தலைவருமான நிலோபர் கபில் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால், கட்டுமான நலவாரிய செயலாளர் தி.குமரன் மற்றும் வாரிய உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கட்டுமான தொழிலாளி பணி அல்லாத இடத்தில் விபத்து ஏற்பட்டு மரணமடைந்தால் வழங்கப்படும நிவாரணத்தை ஒரு லட்சத்திலி ருந்து 4 லட்சம் ரூபாயாகவும், இயற்கை மரணத்திற்கு வழங்கப்படும் நிவாரணம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயும் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் நலவாரிய உறுப்பினர் மட்டுமின்றி அவரது கணவர்/ மனைவி இறந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு உதவி 5 ஆயிரம் ரூபாய் வழங்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டு ள்ளது. அதன்படி, 1-5 வகுப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர் நிலோபர் கபீல், “கட்டுமான வாரியத்தில் பதிவு பெற்ற 25 ஆயிரம் தொழி லாளர்களுக்கு தலா 2 ஆயிரம் மதிப்புடைய பாதுகாப்பு உபகர னங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வை 19ந் தேதி முதலமை ச்சர் தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.