நிக்கோபார் தீவில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 2.04 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஏற்பட்டது. மேலும் ரிக்டர் அளவில் 4.5ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.