tamilnadu

img

அந்தமான் நிக்கோபாரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

அந்தமான் நிக்கோபார் தீவில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அந்தமான் நிக்கோபார் தலைநகர் போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிமீ தொலைவில் பிற்பகல் 2.06 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவுவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று 3 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.  
ஆனால்  நிலநடுக்கம் கடற்பகுதியில் பதிவானதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
 

;