tamilnadu

img

அ.கணேசமூர்த்தியை ஆதரித்து சிபிஎம் சார்பில் தீவிர வாக்குசேகரிப்பு

நாமக்கல், ஏப்.14-நாமக்கல்லில், அ.கணேசமூர்த்தியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்திக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் தெற்கு, வடக்கு ஒன்றிய குழு மற்றும் குமாரபாளையம் நகரக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.இதில் தெற்கு ஒன்றிய குழு உறுப்பினர் குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், ஒன்றிய செயலாளர் ரவி, மாவட்ட குழு உறுப்பினர் மோகன், ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன், முத்துக்குமார் உள்ளிட்டோர் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு ஆலம்பாளையம் பேரூராட்சி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

குமாரபாளையம்

இதேபோல் குமாரபாளையம் 8ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை யில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக தலைமை பொறுப்பாளர் ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெங்கடேஷ், மதிமுக பொறுப்பாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;