tamilnadu

img

நாமக்கல் கொமதேக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம்

நாமக்கல், ஏப்.15-நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் கீரம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில். திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அய்யாவு, வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.வேணுகோபால், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் கு.சிவராஜ். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஒன்றிய தலைவர் சி.செல்வக்குமார், வையாபுரி, தனவேல், திமுகவை சார்ந்த தியாகராஜன் சங்கரன், வி.செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்இதேபோல், புதுச்சத்திரம் ஒன்றியக் குழுவின் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜோதி தலைமையில் இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோட்டில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பூபதி தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆதிநாராயணன், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டதலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;