tamilnadu

img

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை: குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசுமருத்துவமனையில் நர்சாக பணியாற் றிய அமுதவள்ளி என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக பச்சிளங் குழந்தைகளை பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் செய்துவந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. முப்பது ஆண்டுகளாக நடந்துள்ள குழந்தை வியாபாரம் எப்படி வெளிஉலகிற்கு தெரியாமல் மறைக்கப்பட்டது? குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து எப்படி இவர்களால் பெற முடிந்தது?, குழந்தை திருட்டும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதா? போன்றஅடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இப்படி விற்கப்படும் குழந்தைகளுக்கு ராசிபுரம் நகராட்சி அலுவலகம்மூலம் முறைகேடாக பிறப்புச் சான்றிதழும் வாங்கிக் கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளது, அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழலும் - முறைகேடுகளும் பெருக்கெடுத்து ஓடுவதை நிரூபிக்கிறது. இச்சம்பவம் குறித்துகாவல்துறையினருக்கும் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, குழந்தைகள் விற்பனை விவகாரம் குறித்து தீர விசாரிக்க வேண்டுமெனவும், இவர் நர்சாக பணியாற்றிய காலத்தில் மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதா என் பது குறித்தும், இந்த விற்பனையில் வேறுஏதேனும் குழந்தைகளைக் கடத்தும் சமூக விரோதக் கும்பல்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரிக்க வேண்டும், இதற்கு உடந்தையாக இருந்தவர்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; விற்பனை செய்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள், ஊழியர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.


சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து....

;