tamilnadu

img

தார்ச்சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல், செப். 8- திருசெங்கோடு, பெரியமணலி ஊராட்சி யில் கிடப்பில் போட்டுள்ள சாலைப் பணி களை உடனடியாக சரி செய்யக் கோரி அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பெரியமணலி கிராமத்தில் உள்ள சந்தைத் திடலில் இருந்து சக்தி நகர் வையப்பமலை செல்லும் பாதையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்ததால் தார்ச்சாலை அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட நாட்க ளாக கோரிக்கை வைத்து வந்தனர். இதன் பின்னர், கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சாலையை புதுப்பிக்க பணிகள் துவக்கப் பட்டது. ஆனால், தற்போது வரை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள் ளது. இதனால், நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே, கிடப்பில் போட்டுள்ள தார்ச்சாலை பணிகளை உடனடியாக துவங்கி முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

;