நாமக்கல், ஜூன் 10- திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் சிந்தம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஓ. ராஜாபாளையம் ஊராட்சியை சேர்ந்த சிந்தம்பாளையம் கிராமத் தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை 20 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 2 ஆசிரியைகள் பணியில் உள்ளனர். இந்த பள் ளிக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத் தில் சுற்றுசுவர் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சுமார் 4 அடி ஆழம் கொண்ட 10க் கும் மேற்பட்ட குழிகள் தோண்டப் பட்டது. மேலும், பள்ளியைச் சுற்றி 3 புறம் மட்டும் சுவர் அமைக்க ஏற் பாடுகள் நடந்தது. பள்ளியின் பின் புறமும் சுவர் கட்டவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை எழுப்பியதை அடுத்து, பள்ளிக்கு சொந்தமான நிலத்தை அளந்து கொடுக்க கோரி கடந்த 17.09. 2018 ல் வருவாய் துறைக்கு கட்டணம் செலுத்தப்பட்டது. கடந்த 17.11.18 ல் அளந்து தரக் கோரி முறைப்படி கடிதமும் கொடுக்கப்பட்டது. ஆனால் நிலம் அளவை செய்யப்படவே இல்லை. இதனால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. தோண்டிய குழி கள் அப்படியே இருக்க பணிகள் இன்று நடக்கும், நாளை நடக்கும் என காத்திருந்து சலித்து போய் பொது மக்கள் மாவட்ட ஆட்சி யிரிடம் பலமுறை மனு அளித் தும் பயனில்லை. இந்நிலை யில் பள்ளி விடுமுறைக் காலத் திற்குள் பணிகள் முடிந்து விடும் என பொதுமக்கள் நினைத் திருந்த நிலையில் விடுமுறைக்கு பிறகு பள்ளி திறந்தும் பணிகள் நடக்கவில்லை. மேலும், பள்ளிக்குழந்தைகள் நடக்க வழியில்லாததால் ஒரு குழியை பொது மக்களே மூடியுள் ளனர். திறந்துள்ள குழிகளுக்குள் குழந்தைகள் விழுந்து விடும் அபாயம் இருப்பதாலும், மழைக் காலம் தொடங்கி குழிகளுக்குள் தண்ணீர் தேங்கினால் உயிரிழப்பு கள் நடக்கும் அபாயம் இருப்ப தாலும் விரைந்து சுற்று சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பரமசிவத் திடம் விசாரித்த போது, முறைப் படி பணம் கட்டியும் சர்வேயர் நிலத்தை அளந்து கொடுக்காத தால் பணிகள் நடக்கவில்லை என வும், விரைவாக அளந்து கொடுக்க சொல்லி இந்த மாத இறுதிக்குள் சுற்று சுவர் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.