tamilnadu

img

பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டக்கூலி வழங்கிடுக

நாமக்கல், ஜூன் 19- பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.471ஐ தினக் கூலியாக வழங்க  வேண்டும் என சிஐடியு தமிழ்நாடு  பஞ்சாலை தொழிலாளர் சங்கம்  வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், வெப்படை நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகில் சிஐடியு தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ். தனபால் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இப்பொதுக்கூட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந் தபட்ச ஊதியம் ரூ.471ஐ தினக் கூலியாக வழங்க வேண்டும். பஞ்சாலைகளில் கேம்ப் கூலி உற்பத்தி முறைகளை ஒழிக்க வேண்டும். பஞ்சாலைகளில் விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு வேலை இழப்புச் சட்டத்தின் மூலம் நிவா ரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதிகளில் அடைத்து வைத்து இளம் பெண்களை வேலை வாங்கும் முறையை ஒழித்து சட்டப்படியான பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ, பிஎப் பிடித்தம் செய்து அதற்கான அடையாள அட்டைகள் தொழிலாளர்கள் அனை வருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க பொதுச்செயலாளர் எம்.அசோகன், சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்தி ரன், மாநில குழு உறுப்பினர் எஸ்.சுப்பிர மணியன்  ஆகியோர் பேசினர். இந்த பொதுக்கூட்டத்தில்  மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடாசலம், சங்க மாவட்ட தலைவர் டி.ராமசாமி, மாவட்ட பொருளாளர் பி.வீரமுத்து,  துணைத் தலை வர்கள் பாலுசாமி, இராயப்பன், இணைச் செயலாளர்கள் பி.சண்முகம், மாவட்ட குழு உறுப்பினர் பாட்டாய் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.