நாமக்கல், ஆக.19- நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றத்தால் ஞாயிறன்று பெய்த மழையில் அரசு மருத்துவ மனைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா தொகுதிக்கு உட்பட்ட ராசிபுரம் நகராட்சியில் 27 வார்டு களில் சுமார் இரண்டரை இலட்சம் பேர் வசித்து வருகின்றனர். ராசி புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் அரசு மருத்துவமனை 1934 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இம் மருத்துவமனையில் மருத்துவர்கள், ஒப்பந்த ஊழியர்கள் என நூற் றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவமனையில் உள் சிகிச்சை நோயாளிகளுக்கு 190 படுக்கை வசதிகளுடன் இயங்கி வரு கிறது. இப்பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முழுமை யாக நடைபெறாததால் மழைக் காலங்களில் மழைநீர் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலும், மருத்துவமனைகளிலும் புகுந்து விடுகிறது. இதனால் மழைக் காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் சனியன்று இரவு கனமழை பெய்தது. இம்மருத்துவ மனையிலிருந்து முறையான வடிகால் வசதி இல்லை. இம்மருத் துவமனை தாழ்வான பகுதியாக இருப்பதால் மெயின்ரோடு பகுதி யில் இணைக்க கால்வாய் அமைக் கப்படாத சூழ்நிலையில் தொடர்ந்து மழை பொழியும் காலங்களில் இதே போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் ராசிபுரம் அரசு மருத் துவமனையில் மழைநீரால் சூழ்ந்து உள் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்ட நோயாளிகள் படுக்கையை விட்டு கீழே இறங்க முடியாமல் பல மணி நேரம் பரிதவித்து வந்தனர். மேலும் கடந்த சில வாரங்களாக காய்ச்சலால் பாதிக்கப் பட்ட நோயாளிகள் மருத்துவ மனையில் உள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பல மணி நேரமாகியும் மழை நீர் வெளியே செல்ல முடியாமல் சூழ்ந்ததால் கழிப் பறைகளில் உள்ள மலங்கள் மழை நீரோடு கலந்து நோயாளிகள் படுக்கை பகுதிகளுக்கு சென்றதால் பயங்கர துர்நாற்றம் வீசியது. மேலும் நோயாளிகள் தூங்க முடி யாமல் தவித்தனர். மலம், சிறுநீர் கூட கழிக்க முடியாமல் மிகவும் வேதனை அடைந்தனர். நகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப் படாததால் வீடுகளிலும் மழைநீர் புகுந்து மழை காலங்களில் தங்களது உடமைகளையும் பாதுகாக்க முடி யாமல் பரிதவித்து வந்தனர். ராசி புரம் நகராட்சி நிர்வாகம் இத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மிகமிக மெத்தனப் போக்கில் செயல் பட்டு வருவதால் இப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கடும் கண்ட னத்தை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ்.கந்தசாமி கூறியதாவது, மருத்துவமனைகளில் இருந்து சாக் கடை கழிவுநீர் வெளியேறுவதற் கான முறையான கால்வாய் இல்லை. மேலும், சாக்கடை கால்வாய் வருடக்கணக்கில் தூர் வாரப்படாமல் உள்ளது. மேலும், ராசிபுரம் மருத்துவமனையில் தாழ்வான பகுதியில் உள்ளது. ராசி புரம் நகராட்சி பகுதிகளில் கடந்த 4 வருட காலமாக பாதாள சாக் கடை திட்டம் முழுமையாக நிறை வேற்றப்படவில்லை. இதனால் மழை நீரும், சாக்கடை நீரும் வெளி யேறுவதற்கு முறையான கால் வாய்கள் இல்லை. இதனால் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளிலும், அரசு மருத்துவமனைகளில் கழிவு நீர் புகுந்து தேங்கி நிற்பதால், பல் வேறு தொற்று நோய்கள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ராசிபுரம் நகராட்சி நிர் வாகம் போர்க்கால அடிப்படையில் சாக்கடை கால்வாய் பணிகளை செய்து முடிக்க வேண்டும். மருத்து வமனையில் புகுந்துள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க ஏற்படு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார். முன்னதாக, மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை நாமக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி, இடைக் கமிட்டி செயலாளர் ஜீ. செல்வராஜ், பொது தொழிலாளர் சங்கம் மாவட்டத் தலைவர் சங்கரன், போக்குவரத்து தொழிலாளர் சங்க என்.செங்கோட்டையன், மின் வாரிய தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் மாதர் சங்க தலைவர் ராணி உட்பட பலர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள்.