நாமக்கல், ஜூன் 17- குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளை யம் ஒன்றியம் ஆவித்திபாளையம் பகுதியில் சாயக்கழிவு நீர் காவிரி ஆற்று ஓடையில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியத்தில் ஆவித்திபாளையம், சுபாஷ் நகர், பெரியார்நகர், ராமகிருஷ்ணன்நகர், கண்ணதாசன்தெரு உள்ளது. இப்பகுதி யில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு விசைத்தறி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் உள்ள காவிரி ஆற்று ஓடை யில் சாயக்கழிவு நீரை அதிக அளவில் விடு வதால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு இதய நோய், காசநோய், மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக் கப்பட்டு மிகவும் அவதிப்பட்டு வருவ தாகவும், மேலும், குடிநீர் இல்லாத நிலை யில் சாயக்கழிவு நீர் நிலத்தடியில் பாதிப்பை ஏற்படுத்தி சுகாதாரமான குடி நீர் கிடைக்காத நிலை உள்ளது. எனவே, சாயக்கழிவு நீர் காவிரி ஆற்று ஓடை பகுதியில் கலப்பதை தடுக்க வலியு றுத்தி திங்களன்று அப்பகுதி மக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் மனு அளித்தனர்.