tamilnadu

img

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதம் போனஸ் வழங்கிடுக விசைத்தறி தொழிலாளர் சங்கம் முழக்கம்

நாமக்கல், அக்.20- அனைத்து விசைத்தறி தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்சம் 20 சதவிகிதம் போனஸ் வழங்கிடக்கோரி திருச்செங்கோட் டில் விசைத்தறி தொழிலாளர் சங் கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு கைலாசம்பாளையத்தில் கந்துவட்டி கொடுமையால் தற் கொலை செய்து கொண்ட தொழி லாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்க வேண்டும். கந்துவட்டி கொடுமைகளைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விசைத்தறி தொழிலில் ஈடுபடும் ஆண், பெண் இருபாலருக்கும் தீபாவளி பண்டி கைக்கு முன்பாக குறைந்தபட்சம் 20 சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு விசைத்தறி தொழிலாளர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.மோகன் தலைமை வகித்தார். சம்மேளன மாநில தலைவர் பி.முத்துசாமி, சம்மேளன மாநில பொதுச் செயலாளர் எம். சந்திரன், சிஐடியு மாவட்ட செய லாளர் ந.வேலுச்சாமி, சங்க மாவட்ட செயலாளர், எம்.அசோகன் உட் பட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.