tamilnadu

நாமக்கல், தருமபுரி முக்கிய செய்திகள்

லாரி, அரசு பேருந்து மோதி விபத்து 2 பேர் பலி; 15 பேர் படுகாயம்                                                                                                                                                                                                                                                                                                                                                                   நாமக்கல், ஆக.10- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பல்லகாபாளையம் அருகே சனி யன்று கண்டெய்னர் லாரியும் அரசு விரைவு  பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் 2பேர் சம்பவ இடத் திலே பலியாகினர்.  15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து மீது சேலத்தில்  இருந்து கோவை நோக்கி வந்த கண் டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இச்சம்பவம்  குமாரபாளையம் அருகே உள்ள  பல்லக்காபாளையத்தில் நடந்தது. இதில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் காஞ்சிபுரம் மாவட்ட செய்யூரை சேர்ந்த லோகநாதன் (39)  மற்றும் தர்மபுரி பகுதியை சேர்ந்த பேருந்தில் பயணம் செய்த நவீன்குமார் (28) என்பவரும் சம்பவ  இடத்திலேயே பலியாகினர்.  மேலும் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த 6 பெண்கள் உட்பட 15 பேர்  பலத்த காயமடைந்தனர். இவர்களை சங்க கிரி குமாரபாளையம் அரசு மருத்துவ மனைகளில் முதலுதவி சிகிச்சை பெற்று, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து சங்ககிரி  காவல்துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். 

கோழி வளர்ப்புத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு                                                                                                                                                                                                                                                                                                                                                  தருமபுரி, ஆக.10- தருமபுரி மாவட்டத்தில் கோழி வளர்ப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட  ஆட்சியர் எஸ்.மலர்விழி அழைப்பு விடுத் துள்ளார்.  தமிழக அரசு கோழி வளர்க்கும் தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு 100  சதவிகிதம்  அரசு  மானியம் வழங்குகிறது. இதில்  ஊராட்சி ஒன்றியத்திற்கு 500  பயனாளிகள்  வீதம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியத்திற்கு 4 ஆயிரம் பயனாளிகளும், தேர்வு நிலை பேரூ ராட்சிக்கு 75 பயனாளிகள் வீதம்  மாவட் டத்தில் உள்ள 8  தேர்வு நிலை பேரூ ராட்சிக்கு 600 பயனாளிகளும், நிலை-1-ற்கு 107 பயனாளிகள் வீதம் மாவட்டத்திலுள்ள 2 நிலை-1-ற்கு 214 பயனாளிகளும் மொத்தம் 4,814 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.   இத்திட்டத்தின்   கீழ் ஒரு பயனாளிக்கு 25 நாட்டு கோழிகள்  வழங்கப்படவுள்ளது.  இத்திட்டத்தில் பெண் பயனாளிகள் மட்டுமே பயன் பெற முடியும். அந்தப்  பெண்கள் தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வழங்கப் பட்ட மக்கள் பங்கேற்புடன் கண்டறியப் பட்ட ஏழைகளின் பட்டியல் எண் (பி.எல்.பி)  உடையவராக இருக்க வேண்டும். பய னாளி நிரந்தரமாக அந்த  கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஏற்கனவே விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் விலையில்லா  வெள் ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழி  அபிவிருத்தி திட்டங்களில் பயன் பெற் றிருத்தல் கூடாது. இத்திட்டத்தில் விதவைகள், ஆதர வற்றவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவிகிதம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வகுப்பில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். பேரூ ராட்சிகளில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் (பி.பி.எல்) உள்ள பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட தகுதிகள் இருப்பின் விண்ணப்பதாரர் தங்களது பெயர், முகவரி, புகைப்படம், கைப்பேசி எண் ஆகிய விபரங்களுடன் ஆதார் அட்டை நகல் மற்றும் (பி.எல்.பி, பி.பி.எல்) அட்டை நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து  அருகி லுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி  மருத்துவரிடம் 20.08.2019க்குள்  வழங்கிட வேண்டும்.  மேலும் விபரங்களுக்கு மண்டல இணை  இயக்குநர் அலுவலகம் கால்நடை பரா மரிப்புத்துறை தருமபுரி அல்லது உதவி இயக்குநர் அலுவலகங்கள் தருமபுரி மற்றும்  அரூர் ஆகியவற்றை அணுகி பயன் பெறலாம்  என மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி அழைப்பு விடுத்துள்ளார்.