tamilnadu

img

விசைத்தறி தொழிலாளர்களுக்கு எல்ஐசி குழு காப்பீடு திட்ட சிறப்பு முகாம்

 நாமக்கல், ஜூன் 19- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் சிஐடியு காவேரி அலுவலகத்தில் விசைத்தறி தொழிலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எல்ஐசி குழு காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்திய அரசு மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், ஜவுளி ஆணையாளர் மூலமாக விசைத்தறி சேவை மையத் தின் சார்பில் ஒருங்கிய குழு காப்பீடு திட்டம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு சேர்க்கப்பட்டது. இத்திட்டத்தில் இவர்களுக்கு விபத்து நிவாரணம், கல்வி நிதி, ஓய்வு கால நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பெறுவ தற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் விசைத் தறி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவர்களது பெயர்களை இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொண்டனர். இம்முகாமில் விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.அசோகன், சங்க ஒன்றிய செயலாளர் முத்துகுமார் முற்றும் ஜவுளி ஆணையாளர் விசைத்தறி சேவை மைய அதிகாரிகள் உட்பட ஏராளமான தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.