நாமக்கல், பிப்.19- மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து புதனன்று நாமக்கல்லில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இடைக்கமிட்டி செயலாளர் பி. ஜெயமணி தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.குழந் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பெருமாள், மூத்த உறுப்பினர் கா.மு.காளியப்பன், சிபிஐ நகர செயலாளர் ந.தம்பி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஆர்ரவி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோ கன், மாவட்ட குழு உறுப்பினர் கே. மோகன் மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.