tamilnadu

கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்

 நாமக்கல், ஆக.1- கல்வி உதவித் தொகை பெறுவதற்கு முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன் னாள் படை வீரர்களின் வாரிசுகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சார்ந்த முதல் பட்டயம், பட்டப்படிப்பு பயி லும் மாணவ, மாணவியருக்கு, பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தின்கீழ் மாணவராக இருப்பின், ஆண் டுக்கு ரூ.30 ஆயிரம், மாணவியருக்கு ரூ.36 ஆயிரமும் வழங் கப்படுகிறது.  இந்த நிதியுதவி பெறுவதற்கு பிளஸ் 2 தேர்வில் 65 சதவி கித மதிப்பெண் பெற்று தகுதியுள்ள, முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை பெற www.ksb.gov.in என்ற இணையதளம் மூலம் நிகழாண்டுக்கு வரும்நவம்பர் 15 ஆம் தேதிக் குள் விண்ணப்பித்து அதனை பதிவிறக்கம் செய்து  மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு  உதவி இயக்குநர் முன்னாள் படை வீரர் நல அலுவலகத் தைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.