tamilnadu

எரிவாயு குறைதீர் கூட்டம்

நாமக்கல், பிப்.12- நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளியன்று நடைபெறுகிறது.  நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் நலன்  கருதி அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன முகவர்கள்,  எரிவாயு விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள் ஆகியோர் கலந்து எரிவாயு குறைதீர் கூட்டம் வெள்ளி யன்று (பிப்.14) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர்கள் இக்கூட்டத்தில் கலந்து  கொண்டு தங்கள் குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை எழுத்து வடிவில் இரண்டு பிரதிகள் அளித்து தெரிவிக் கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.