tamilnadu

img

மிகவும் பழுதடைந்த நிலையில் மின்சார கம்பங்கள்

நாமக்கல், ஏப்.26-எலச்சிபாளையம் அருகே ஆயித்தாகுட்டையில் மிகவும் பழுதடைந்தநிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி உரியபாதுகாப்பு வழங்கிடவேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாமக்கல், மாவட்டம், திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஆயித்தாகுட்டையில்காளிகாட் சர்வேஎண்91/5ல் உள்ள விவசாய நிலத்தில் அரசுசார்பில் அமைக்கப்பட்ட மின்கம்பத்தின் கட்டு கம்பிகள் உட்பட மிகவும் பழுதடைந்து எந்தநேரத்திலும்கீழே விழும்அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள எலச்சிபாளையம்மின்சார வாரியம் கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கில் உள்ளது. கடந்த சிலமாதங்களுக்கு முன்பு இதே பகுதியில்கனமழையின் காரணமாக பாலமுருகன்என்பவர் விவசாய தோட்டத்தில் மின்கம்பங்கள் சாய்ந்ததில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்து குறிப்பிடத்தக்கது.ஆகவே, உயிரிழப்புகள் ஏற்படாமல் உடனடியாக எலச்சிபாளையம் மின்சார வாரிய நிர்வாகம் தலையிட்டு பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றிட வேண்டும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

;