tamilnadu

img

பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்க கோரிக்கை

திருச்செங்கோடு, செப்.21 -  எலச்சிபாளையம் ஒன்றியம் கொத்தம்பாளை யத்தில் பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  திருச்செங்கோடு அருகேயுள்ள எலச்சிபாளையம் ஒன்றியத்தில் உள்ள கொத்தம்பாளையம் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு  வசிப்பவர்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் காவிரி நீர் மற்றும் ஆழ்துளை கிணற்று நீர் தேக்கப்பட்டு பொதுமக்க ளுக்கு விநியோகிகப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இருபது தினங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால் இப்பகுதியில் முழுமையாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் சிரமப் பட்டு வருகின்றனர். எனவே அரசு நிர்வாகம் பழு தடைந்த மின் மோட்டாரை பழுது நீக்கி முறையான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.