நாமக்கல், மார்ச் 1- பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் நவீன கழிப்பிடம் கட்டி கொடுக்குமாறு நகராட்சி ஆணையாளரிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் சனியன்று கோரிக்கை மனு அளித் தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் இடிந்த கழிப்பிடத்தை சீரமைக்க வேண்டும். மேலும் நவீன கழிப்பிடம் கட்டி தர வேண்டும். அதே போல் பெரியார் நகர் கழிப்பிடம் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். ஆவரங்காடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். மேலும் வாரம் இரு முறை கொசு மருந்து அடித்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலா ளர் ஆர்.ரவி தலைமையில் நகராட்சி ஆணை யாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆணையாளர் இப்பிரச்சனை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.