நாமக்கல், ஜூன் 14- குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலை மையில் அனைத்துத்துறை அரசு அலு வலர்கள் ஏற்றனர். குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் குழந் தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளி யன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி யில், இந்திய அரசியலமைப்பு விதிக ளின் படி கல்வி பெறுவது குழந்தைக ளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்த வித பணிகளிலும் ஈடு படுத்த மாட்டேன். குழந்தைகள் பள் ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன். குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என் னால் இயன்றவரை பாடுபடுவேன் என அனைத்து அலுவலர்கள் உறுதி ஏற்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு விளம்பர ஒட்டுவில்லையை வெளியிட்டு, குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சங்கர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஞானவேல், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் அ.போ.அந்தோணி ஜெனிட், ரெட்கிராஸ் செயலாளர் சி.ஆர். ராஜேஸ் கண்ணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் மற் றும் பணியாளர்கள் கலந்துகொண்டு உறுதிமொழியினை ஏற்றனர்.