tamilnadu

திருக்குறள் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல், ஆக. 4- நாமக்கல்லில் திருக்கு றள் முற்போதல் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கா.மெக ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரி வித்துள்ளதாவது, தமிழ் வளர்ச்சித்துறையின் சார் பில், ஒவ்வோரு ஆண்டும் 1,330 திருக்குறள்களையும் ஒப்புவிக்க மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் முற்போதல் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் 70 மாண வர்கள் தெரிவு செய்யப் பட்டு, ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகி றது.  

இதற்கான திறனாய்வு நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குந ரால் நடத்தப்படும். இப் போட்டியில் பங்கேற்பவர் கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். நாமக் கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இப்போட்டி யில் பங்கேற்கலாம்.   இந்நிலையில், போட்டி யில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் நாமக் கல் மாவட்ட ஆட்சியர் அலு வலகக் கூடுதல் கட்டிடத் தில் இயங்கும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவல கத்தில் விண்ணப்பங்க ளைப் பெற்று விண்ணப்பிக் கலாம். மேலும்,  www.tamil valarchithurai.com என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண் ணப்பிக்கலாம் எனவும் தெரி வித்துள்ளார்.

;