tamilnadu

img

தமிழகத்தில் ரூ. 5 ஆயிரம் கோடி நெடுஞ்சாலை திட்டங்கள் கைவிடப்பட்டது?

புதுதில்லி,நவ.10-  தமிழகத்தில் 4 ஆயிரத்து 929 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்படி விழுப்புரம் - புதுச் சேரி, புதுச்சேரி - பூண்டியங் குப்பம், பூண்டியங்குப்பம் - சட்ட நாதபுரம் மற்றும் விழுப்புரம் - நாகப்பட்டினம்  ஆகிய 4 நெடுஞ் சாலை  திட்டங்கள் கைவிடப்பட்டு ள்ளன. மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜானா திட்டத்தின் கீழ் வரும் விழுப்புரம் - நாகப்பட்டி னம் இடையிலான 180 கிலோ மீட்டர் தூரமுள்ள நான்கு வழிச் சாலை திட்டத்தால், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி மற்றும் காரைக்கால் இடையே யான பயண தூரம் குறைவது டன், தொழில் வளர்ச்சியும் மேம்படும். இந்நிலையில் இந்த சாலை திட்டங்களை நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்துள்ளது. நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவது தாமதாவ தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.