அருணாச்சல பிரதே சத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதி காலை 4.24 மணிக்கு இந்த நிலநடுக்கத்தால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் சேதம் ஏற் பட்டதாக தகவல் எதுவும் இல்லை.