tamilnadu

img

உ.பி. தலித் இளம் பெண் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்...

நாகர்கோவில்:
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது தலித் இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக தாக்கி படுகொலை செய்துஉடலை ரகசியமாக எரித்த கொடூர சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஆதித்யநாத் அரசை கண்டித்தும் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் இணைந்து செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெ.சைமன் சைலஸ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரன், மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவி, விதொச மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் ஆகியோர் பேசினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரசெயலாளர் சுஜா ஜாஸ்மின், சந்திரகலா, சந்திரபோஸ், ஸ்டீபன் ஜெயக்குமார், ஜாண், சுந்தர்ராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.