நாகர்கோவில்
கொரோனா வைரஸ் பீதியால் தமிழகம் திரும்ப முடியாமல் ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத்தரக்கோரி நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வைத்திருந்த பதாகையில், “மக்கள் நலன் காக்கும் அரசே மீனவர்களை மீட்டு வா. மீட்டு வா... மீட்டு வா... நம் மீனவர்களை மீட்டு வா... என்று எழுதப்பட்டிருந்தது.