tamilnadu

ஊராட்சி பணம் கையாடல்... முன்னாள் தலைவருக்கு 2 ஆண்டு சிறை...

நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முட்டம் ஊராட்சியில் 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஊராட்சித் தலைவராக இருந்தவர் திமுகவை சேர்ந்த சிசியோயன்.  இவர் சொத்துவரி, தொழில்வரி உட்பட ஊராட்சி பணத்தில் 61 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கின் இறுதி விசாரணை புதனன்று நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் நடைபெற்றது. அரசு வழக்கறிஞர் யாசின் முபாரக் அலி ஆஜரானார், நீதிபதி கிறிஸ்டியன் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அதன்படி ஊராட்சி பணத்தை கையாடல் செய்த சிசியோயனுக்கு இரண்டு ஆண்டுகள்சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து  உத்தரவிட்டார்.