tamilnadu

img

சகாய ஆன்றனி மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாவட்டக்குழு உறுப்பினரும், சிஐடியு மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகியும், ஊராட்சி ஒன்றியஉறுப்பினருமான ஜி.சகாய ஆன்றணியை படுகொலை செய்யும் நோக்குடன் தாக்கியவர்களை கண்டித்தும், அவரை தாக்கிய சமூக விரோதிகளை உடனடியாக காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புசனியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியுமாவட்ட செயலாளர் கே.தங்கமோகன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அண்ணாத்துரை, கட்டுமான தொழிலாளர் சங்கமாவட்ட செயலாளர் கே.பி.பெருமாள், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஐடா ஹெலன், விவசாயிகள் சங்கமாவட்ட செயலாளர் ஆர்.ரவி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி, சிஐடியு மாவட்ட தலைவர் பி.சிங்காரன் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்ட பொருளாளர் சித்ரா, மாவட்ட நிர்வாகிகள் சந்திரபோஸ், எஸ்.அந்தோணி, ஆலிவர் பிறைட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநகர செயலாளர் கே.மோகன் மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மார்த்தாண்டம் வட்டாரக் குழு சார்பில் செயலர் அனந்த சேகர்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன், முன்னாள் நகர்மன்ற தலைவர் டெல்பின் கலந்து கொண்டனர்.