tamilnadu

மீன்பிடி துறைமுகத்தில் தொடரும் உயிர் பலி.... பாதுகாப்பு கோரி 3700 படகுகள் வேலைநிறுத்தம்

நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடிதுறைமுக கட்டுமான பணிகள்நடந்து கொண்டிருக்கும்போதே துறைமுகத்தை திறக்க அரசுதரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது துறைமுகத்தின் முகத்துவாரத்தை அகலப்படுத்தியும், ஆழப்படுத்தியும் திறக்க வேண்டும்.அதுவரை துறைமுகத்தை திறக்ககூடாது என மீனவர்கள் அவசரகோலத்தில் துறைமுகம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

அரசுதரப்பில், துறைமுகம் திறந்தபிறகு உடனடியாக சீரமைக்கப்படும் என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்டு துறைமுகம் திறக்கப்பட்டது. ஆனால்பல ஆண்டுகள்கடந்தும் துறைமுகம் சீரமைக்கப்படவில்லை. இதனால் துறைமுகத் துவாரத்தில் பலபடகுகள் கவிழ்ந்து விபத்துகள் ஏற்பட்டு பலமீனவர்கள் உயிரிழந்தனர். அதிலும்குறிப்பாக, கடந்த ஐந்துமாதங்களில் நான்குமீனவர்கள் உயிரிழந்தனர்.இதைதொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மீன்பிடி துறைமுகத்தை சீரமைக்க கேட்டு தொடர் சத்தியாகிரக போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.அப்போது தமிழகஅரசின் தில்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் உடனடியாக துறைமுகம் சீரமைக்கபடும் எனஉத்திரவாதம்  அளித்ததை தொடர்ந்துபோராட்டம் கைவிடப்பட்டது. 

இதன் எதிரொலியாக துறைமுகத்தின் மணல்அள்ளும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு இரண்டுநாட்கள் மட்டும்மணல் அள்ளப்பட்டது. அதன்பிறகுஎந்தபணியும்நடைபெறவில்லை. இந்தநிலையில்கடந்தமூன்று தினங்களுக்குமுன்புபடகு கவிழ்ந்து மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.  ஏற்கனவே அரசுதரப்பில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தூத்தூர் மண்டல எட்டு மீனவகிராமமக்கள் சின்னத்துறைபகுதியில் செவ்வாயன்று தொடர் சத்தியாகிரக போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளைவலியுறுத்தி  அரசுக்கு எதிராக  முழக்கங்களைஎழுப்பினர். இந்தபோராட்டத்தின் காரணமாக தூத்தூர் மண்டலஎட்டு மீனவகிராமங்களைசேர்ந்த 700-க்கும் மேற்பட்ட  விசைப்படகுகளும், 3000-க்கும்மேற்பட்ட நாட்டுபடகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.