tamilnadu

இருசக்கர வாகனங்கள் மோதல்; இருவர் பலி : மற்றொரு விபத்தில் கட்டட தொழிலாளி பலி

நாகர்கோவில், மே 20-கேரள மாநிலம், மஞ்சவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர்சுபின்குமார் (42). திருமணம் ஆகவில்லை. இவர், குமரிமாவட்டம், பளுகல் பகுதியில் உள்ள டாஸ்மாக கடையில்பார் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.ஞாயிறன்று நள்ளிரவு பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பளுகல் சந்தை அருகே வந்தபோது, எதிரே வேகமாக வந்த இருசக்கரவாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு வாகனங்களில் வந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை மீட்டு, அக்கம் பக்கத்தினர் திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், செல்லும் வழியிலேயே சுபின்குமார் இறந்தார்.இதேபோன்று, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த நாங்குநேரி கீழதேவநல்லூர் பகுதியை சேர்ந்தமாரி (24) என்பவரும் இறந்தார். அவருடன் வந்த நாங்குநேரிராமநேரியை சேர்ந்த சித்திரைவேல் (20) படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாரி, சித்திரைவேல் இருவரும் பளுகல்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பியபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த விபத்துகுறித்து பளுகல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோன்று தக்கலை அருகேயுள்ள மணலிக்கரையைசேர்ந்தவர் அனிஷ் (21). கட்டட தொழிலாளியான இவர் தனதுநண்பர் சஜூவுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சாமிவிளை பகுதியில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி இருவரும்தூக்கி வீசப்பட்டனர். படுகாயங்களுடன் கிடந்த இருவரையும், அப்பகுதியினர் தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அனிஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருடன் சென்ற சஜூ சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தக்கலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

;