tamilnadu

நரிக்குறவர் தம்பதியின் குழந்தை கடத்தல்: உதவாத காவல்துறை சிசிடிவி கேமராக்கள்

நாகர்கோவில்:
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர்கள் முத்துராஜா, புஷ்பவல்லி தம்பதியர். நாடோடி வாழ்க்கை வாழும் நரிக்குறவர்களான இவர்கள் ஒரு குழுவாக ஞாயிறன்று குளச்சல் பகுதியில் தேன் மற்றும் பாசி மாலை விற்பனைக்கு வந்தனர்.

பின்னர் குளச்சல் பேருந்து நிலையத்தில் இரவு தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு அங்கே வந்தநபர் ஒருவர் முத்துராஜா புஷ்பவல்லி தம்பதியரின் 8-மாத பெண் குழந்தை துர்காவள்ளியை கடத்தி சென்றார். கண் விழித்து பார்த்த அந்த தம்பதியர் குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து குளச்சல் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் குளச்சல் பேருந்து நிலையம் மற்றும் முக்கிய பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரிக்க முற்பட்ட போது எந்த சிசிடிவி கேமாராவும் மின் இணைப்பு இன்றி உபயோகத்தில் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து தனியார்கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தில் விசாரணைக்கு காவல்துறை சார்பில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் உபயோகத்தில் இல்லாதது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

;