நாகப்பட்டினம், ஜூலை 25- நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் போலகம், நெய்க்குன்னம் ஆகிய இரு ஊர்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளைகள் தோற்று விக்கப்பட்டன. கடந்த வாரம் ஜூலை 17 அன்று, இதே திரு மருகல் ஒன்றியத்தில் ராராதிமங்கலம், ஆண்டிப்பந்தல் ஆகிய இரு ஊர்களில் வாலிபர் சங்கத்தின் புதிய கிளைகள் அமை க்கப்பட்டன. தற்போது, மேலும் இந்த இரு இடங்களில் புதிய கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலகம், நெய்க்குன்னம் ஆகிய இடங்களிலும் புதிய கிளைகள் அமைக்கப்பட்டு, சங்கக் கொடி ஏற்றப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இரு அமைப்புக் கூட்ட ங்களுக்கும் சங்கத்தின் திருமருகல் ஒன்றியத் தலைவர் எம்.எஸ்.பிரபாகரன் தலைமை வகித்தார்.