தரங்கம்பாடி: நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட் ட்பட்ட திருக்களாச்சேரி ஊராட்சியில் மாற்றுத்திறனாளி தனித்துவம் வாய்ந்த அடை யாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜனாப் ரபீக் தலைமை வகித்தார். ஒன்றிய சிறப்பு அலுவலர்மனிஷ் கலந்து கொண்டு மத்திய அரசின் அரசின் மாற்றுத்திறனாளி தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவது குறித்து பேசினார். இம்முகாமில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு மனுக்கள் அளித்தனர். இதில் சமூக ஆர்வலர்ஆயப்பாடி முஜிபுர் ரஹ்மான்,ஜனாப் பதுருதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.