tamilnadu

img

மாநில தடகளப் போட்டிக்கு ஏவிசி கல்லூரி மாணவிகள் தேர்வு

 மயிலாடுதுறை, ஆக.14- மயிலாடுதுறை அருகே உள்ள மன்னன் பந்தல் ஏவிசி  கல்லூரி மாணவிகள் சென்னையில் மாநில அளவில் நடை பெற உள்ள தடகளப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு ள்ளனர். கடந்த 10-ம் தேதி மயிலாடுதுறையில் நடந்த மாவட்ட  அளவிலான தடகளப் போட்டியில் ஏவிசி கல்லூரி மூன்றாம் ஆண்டு பொருளாதார துறையை சேர்ந்த மாணவி ஆர்.இந்திராணி 200 மீ ஓட்ட பந்தயத்தில் முதலி டமும், பி.பார்கவி மூன்றாம் ஆண்டு இளங்கலை கணிதம்  5000மீ ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும், டி.அபிதா மூன்றாம்  ஆண்டு தமிழ் குண்டு எறிதல் போட்டியில் மூன்றாமிட மும் பெற்று சென்னையில் மாநில அளவில் நடைபெற  உள்ள தடகளப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரியின் ஆட்சி மன்ற குழு தலைவர் என்.விஜயரெங்கன், செயலர் கே.கார்த்திகேயன், ஆட்சி மன்ற உறுப்பினர்கள், முதல்வர் ஆர்.நாகராஜன், உடற்கல்வி இயக்குநர்கள், பேராசி ரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டினர்.