நாகப்பட்டினம், ஜூலை 13- கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன், மார்ச் மாதம் கடைசி வாரத்தில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தொடர் கூட்டத்தில், மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதற்குப் பின், மார்ச் 25 முதல் கொரோனா 6-வது கட்ட ஊரடங்கு காலம் தொடர்ந்து நிலவி வருகிறது. சட்டமன்றத்தில் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக அறிக்கப்பட்டு, 109 நாட்கள் கழித்து, தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஆர்.லலிதா, ஐ.ஏ.எஸ். மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக என்.ஸ்ரீநாத் ஐ.பி.எஸ். ஆகியோர் ஜூலை 11 அன்று அரசின் ஆணைப்படி நியமிக்கப்பட்டுள்ளனர்.