தரங்கம்பாடி, ஜன.30- நாகை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் தமிழ்நாடு திருவள்ளுவர் மன்றம் சார்பில் திருக்குறள் பரப்புரை பிரச்சாரம் புதன்கிழமை நடை பெற்றது. திருக்கடையூர் கலைமகள் மெட்ரிக் பள்ளி யில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் உருவச்சிலை க்கு தமிழ்நாடு திருவள்ளுவர் மன்றத்தினர் மாலை அணிவித்தனர். திருவள்ளுவர் மன்ற பொதுச் செயலாளர் முருகு. அருணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் தேவூர் க.கோ. மணிவாசகம் முன்னிலை வகித்தார். கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிவானந்தம் வரவேற்று பேசினார். தொடர்ந்து பிரச் சாரக் குழுவினர் சங்கரன்பந்தல், செம்பனார் கோயில், திருக்கடையூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களி டையே திருக்குறள் தனித்தன்மையைக் குறித்து பேசினர். மன்ற பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்