tamilnadu

img

அரசுப் பள்ளியில் திருக்குறள் பரப்புரை

தஞ்சாவூர், மார்ச் 11- தமிழ்நாடு திருக்குறள் திருமன்றம் சார்பில் பேராவூரணி வடகிழக்கு பள்ளியில்  திருக்குறள் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. திருக்குறளை வாழ்வியலாக்க தினமும் திருக்குறள் படிப்போம் என்று மாணவர்களி டம் வலியுறுத்தப்பட்டது. திருக்குறள் கேள்வி களுக்கு பதில் அளித்த மாணவர்களுக்கு திரு க்குறள் புத்தகம் பரிசளிக்கப்பட்டது. பள்ளித் தலைமை ஆசிரியர் சித்ராதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருக்குறள் திருமன்றத்தைச் சேர்ந்த முருகுஅருணன், பட்டாபி ராமன், உலகத் திருக்குறள் பேர வையின் பொறுப்பாளர் புலவர்  சு.போசு, பேராவூரணி திருக்குறள்  பேரவையை சேர்ந்த பாவலர் மு.தங்கவேலனார், ஆயர் த.ஜேம்ஸ், மெய்ச்சுடர் நா. வெங்க டேசன், தமிழ்வழிக் கல்வி இயக்க  ஒன்றியப் பொறுப்பாளர் த.பழனி வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பரப்புரை ஊர்தியில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் குறித்த பதாகையை மாண வர்கள் பார்வையிட்டனர். மாணவர்கள் அனைவருக்கும் திரு வள்ளுவர் உருவப்படம் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர் அ.காஜாமுகைதீன் நன்றி கூறினார்.