tamilnadu

img

குடியுரிமை மசோதாவுக்கு எதிராக கடையடைப்பு போராட்டம்

சீர்காழி, டிச.22- சீர்காழி அருகே தைக்காலில் குடி யுரிமைச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கடை களும் அடைக்கப்பட்டன. நாகை மாவட்டம் சீர்காழி அருகே தைக்காலில் அனைத்து கடைகளும் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அடைக்கப்பட்டன. தைக்கால் வியா பாரிகள் சங்கத் தலைவர் முஸ்தபா தலைமையில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் செம்பனார்கோவில் மேல முக்கூட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் சனி யன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், செம்பனார்கோவில் கிளை பொறுப்பா ளர்கள் பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள், இளைஞர்களிடம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெற்றனர்.