சீர்காழி, அக்.21- பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 10 வருடமாக பயனின்றி இருக்கும் உயர் கோபுர மின் விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. நாகை மாவட்டம் பழை யாறு மீன் பிடி துறைமுகம் மாவட்டத்திலேயே இரண்டா வது பெரிய மற்றும் சிறந்த துறைமுகமாகவும் இருந்து வருகிறது. இந்தத் துறை முகத்திலிருந்து தினந்தோ றும் விசைப் படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மீன வர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். மேலும் இத்துறை முகத்தில் சுற்றுப்புற கிரா மங்களைச் சேர்ந்த 2 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட ஆண்- பெண் தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தினந்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் பழையாறு துறைமுகத்துக்கு வந்து செல் கின்றனர். இரவு நேரங்களி லும் மீனவர்கள் இத்துறை முகத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள பல மின் விளக்குகள் பழுதடைந் துள்ளன. இத்துறைமுகத்து க்கு அதிக ஒளி வழங்கி வரும் உயர் கோபுர மின் விளக்கு கடந்த 10 வருடங்களாக செயல் படவில்லை. இக்கோபுர விளக்குகள் அனைத்தும் எந்த பயனுமின்றி இருந்து வருகிறது. இரவு நேரங்களில் இத்துறைமுகத்தில் வேலை பார்த்து வரும் தொழிலா ளர்கள் மற்றும் கடலிலிருந்து மீன் பிடித்து வரும் மீனவர்கள் அச்சத்துடனையே வந்து செல்கின்றனர். எனவே மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் கருதி உயர்கோபுர மின் விளக்குகளை உடனடியாக ஒளிரச் செய்ய மீன்பிடித் துறை அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பழையாறு கருவாடு வியாபாரிகள் சங்கத் தலை வர் பொன்னையா கோரிக்கை விடுத்துள்ளார்.