tamilnadu

தஞ்சாவூர், நாகப்பட்டினம் முக்கிய செய்திகள்

கவுண்ட்டரில் பணம் கட்ட வராதே! மிஷின் மூலமாகவே செலுத்துங்கள்! சீர்காழி ஐஓபி வங்கியில் கெடுபிடி
சீர்காழி, ஜூலை 30-நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வங்கியின் உள்ளே வரக் கூடாது. வெளியே உள்ள மிஷின் மூலமாக தான் செலுத்த வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கெடுபிடி செய்வதாக வாடிக்கையாளர்கள் புகார் செய்கின்றனர். சீர்காழியில் தேசிய வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, இந்தி யன் வங்கி போன்றவற்றில் கவுண்டரில் பணம் செலுத்த சென்றால் மறுப்பதில்லை. ஆனால் சீர்காழி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணத்தை கவுண்டர் மூலம் செலுத்த உள்ளே சென்றால் செக்யூரிட்டி டெபாசிட் சிலிப் கூட தர மாட்டார். எப்படியோ டெபாசிட் சிலிப்பை பெற்று பூர்த்தி செய்து கவுண்டர் பக்கம் சென்றால், ஏங்க வெளியே மிஷினில் போட வேண்டியது தானே, இங்க ஏன் கொடுக்கிறீங்க என்பார்கள். சார் பழைய நோட்டாக இருக்கி றது. மிஷின் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்று பதிலுக்கு கூறினால், நாங்க புது நோட்டு தருகிறோம் உள்ளே பணம் போட வரக்கூடாது என்று முகத்தை சுளித்து பேசுவார்கள்.  ஒவ்வொரு வங்கியிலும் பணம் செலுத்த ஒரு கவுண்ட ரும் பணம் போட ஒரு கவுண்டரும் இருக்கும். ஆனால் கடந்த ஓராண்டாக ஐ.ஓ.பி யில் பணம் செலுத்த இருந்த கவுண்டரை மாற்றி அதை ஆதார் எண் மூலம் பணம் எடுக்கும் கவுண்ட ராக மாற்றி உள்ளார்கள். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பணம் செலுத்தும் மிஷினில் பணம் போடத் தெரியாமல் பலர் தவிக்கின்றனர். இத னால் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து சீர்காழி ஐ.ஓ.பி வங்கியின் மேலாளர் கூறுகை யில், ஏற்கனவே இருந்த மேலாளர் பின்பற்றிய வழிமுறை யையே நான் பின்பற்றி வருகிறேன். இயந்திரத்திலேயே பணம் செலுத்துங்கள் என்று கூறினார்.  இந்த வங்கி மேலாளர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். தட்டுத் தடுமாறி தமிழ் பேசுகிறார். இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப் பாட்டில் இயங்கும் சில வங்கிகளில் கவுண்டரில் பணம் வாங்கிக் கொண்டும் சில வங்கிகளில் கவுண்டரில் பணம் வாங்காமல் இயந்திரத்தின் மூலம் போட சொல்வதும் முரண்பாடாக உள்ளது. எனவே வாடிக்கையாளர் நலன் கருதி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலையில் கிடந்த பணப் பையை  காவல்துறையிடம் ஒப்படைத்த பெண் 
தஞ்சாவூர், ஜூலை 30-தஞ்சை பூதலூரை அடுத்துள்ள அய்யனாபுரம் சவேரியார் மனைவி சின்னம்மாள். இவர் கடந்த 24ஆம் தேதி பூதலூர் நால்ரோடு பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அங்கு ரோட்டில் ஒரு பை கிடந்தது. அதை எடுத்து பார்த்தவர் அதில் நிறைய ஆவணங்கள் இருந்ததால் தனக்கு படிக்க தெரியாததால் அதனை வீட்டில் வைத்து விட்டார். வெளியூர் சென்றிருந்த தன் மகன் அமல்ராஜிடம் 29ஆம் தேதி ஊருக்கு வந்ததும் அதனை காண்பித்துள்ளார். உடனடியாக அமல்ராஜ், அரசியல் கட்சிப் பிரமுகரான அற்புதராஜ், தன் தாயையும் அழைத்துக் கொண்டு, பூதலூர் காவல் நிலையத்திற்கு சென்று ஒப்படைத்துள்ளார். அந்தப் பையில் சித்திரக்குடியை சேர்ந்த கமலக்கண்ணன் மனைவி விஜயலெட்சுமியின் வங்கி கணக்கு புத்தகம், ஆதார்கார்டு, பான்கார்டு, ரூ.7 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.  காவல்நிலையத்தில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் காமராஜ், ஏட்டு வாசு ஆகியோர் இதுகுறித்து விஜயலெட்சுமிக்கு தகவல் கொடுத்து தவறவிட்ட பணத்துடன், ஆவணங்களையும் அவரிடம் ஒப்படைத்தனர். கீழே கிடந்த ஆவணங்களையும், பணத்தையும் எடுத்து அதனை தவற விட்டவரிடம் ஒப்படைத்த அந்த பெண்ணின் இச்செயலை காவல்துறை யினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.